சவம்

நண்பரின் வீட்டில் ஒரு பதின்மவயதுப் பூலான்தேவி மீதமிருக்கிறாள்.

அவளுக்கு என்னிடமும், எனக்கு அவளிடமும் சேட்டைவிடவேண்டும்.

காணும் இடங்களிலெல்லாம் எனது தலையில் மிருதங்கம் வாசிக்கும் வித்துவான் அவள்.

பதிலுக்கு பூலான்தேவியைக் காணும்போதெல்லாம் ”அடியேய் கறுப்பி” என்பபேன்.

அதற்கு அவள் ”போடா சவம்” என்பாள்.

சவத்திற்கும் உயிர்கொடுக்கக்கூடியது அவளது செல்லத் தமிழ்

ஒருநாள் ”அம்மாச்சி, சவம் என்றால் என்ன?” கேட்டேன்.

”தெரியாது.. அப்பாவுக்கு கோபம் வந்தால் அப்படித்தான் சொல்லுவார்” என்றாள்.

”அப்ப நீ சொல்லாம்” என்றேன்.

அண்மையில் ஒரு மண்டபத்தில் பலருடன் நின்றிருந்தாள். அருகே சென்று ”தலையைத் நீவிவிட்டேன்”

அருகே இருந்தவர்கள் ”இவரா உன் தந்தை என்றார்கள்”

”எனக்கு இவரும் தந்தை என்றாள்”

உச்சிமோர்ந்து.... ”நன்றி கறுப்பி” என்றேன்

போடா சவம் என்றாள்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்