நோர்வே ஈழமக்கள்அவை இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகிறது என்று தமிழ்நெட் உறுதிப்படுத்துகிறது.

தமிழ்நெட் ஜெயச்சந்திரன்  தனது சக தோழர்கள் ஸ்ரீலங்கா அரசுடன் தேனிவுகொண்டாடுவதுபற்றி
ஏன் எழுதவில்லை என்று கேட்டு சனிக்கிழமைதான் எழுதியிருந்தேன்..

ஞாயிற்றுக்கிழமை மாலையே  ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.

அதில், ஈழமக்கள்அவையும், நோர்வே தமிழர்களில்   சுதாரத்துறையைச் சேர்ந்த முக்கியமானவர்கள் சிலரும் ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயற்படுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார்.

// Interestingly, all the three networks are involved in deceiving sections of Tamil diaspora, particularly those who were directly and indirectly involved in the TGTE, GTF and Norwegian Council of Eezham Tamils (NCET). The collaborators in the expanded Diaspora-programme, particularly those from Norway, hail from the health sector. //

[TamilNet, Sunday, 04 June 2017, 23:12 GMT]

இதனை எழுதுவதற்கு இத்தனை காலம் பொறுமைகாத்ததன் இரகசியம் என்னவென்பதை அவர் மட்டுமே அறிவார்?

ஸ்ரீலங்கா அரசின் பக்கம் சாய்ந்துவிட்ட தனது உற்ற நண்பர்களின் பெயரை, ரீரீசியையும் விசுவாசிக்கும் உண்மையான விசுவாசிகளுக்காகவாவது எழுதும் அகச்சுத்தியும், நேர்மைத்தன்மையையும் கூட அவரிடம் இப்போதும் காணமுடியவில்லை. (நண்பர்களையும் தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும் எண்ணமாகவும் இருக்கலாம்)

தமிழ்நெட், தனது கடடுரையில்  நோர்வே ஈழமக்கள்அவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா என்பதை தெளிவாகவே ஒப்புக்கொள்கி்ன்றது.

தவிர, நோர்வே ஈழமக்கள்அவையையும் பகிரங்கமாகவே துரோகிகளின் பட்டியலில் சேர்த்துவிட்டிருக்கிறது.

எனது கேள்வி என்னவெனில்...

தமிழ்நெட் ஜெயச்சந்திரனின நெருங்கிய சகாவும், சர்வதேச ஈழமக்கள்அவையின் பேச்சாளரும் நோர்வே ஈழமக்கள்அவையின் முக்கிய உறுப்பினருமான ஸ்டீபன் புஸ்பராஜா இந்தக் குற்றச்சாட்டிற்கு என்ன சொல்லப்போகிறார் என்பதும்...

நோர்வே ஈழமக்கள்அவையினர்  தங்களை தமிழ்நெட் துரோகிகளாக்கியதற்கு என்ன சொல்லப்பொகிறார்கள் என்பதும்தான்.

நோர்வே புலிகள் பகிரங்கமாகவே தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது.

விசுவாசிகளின் பாடு திண்டாட்டம்தான். பாவம் அவர்கள்.
நம்பி ஏமாந்தவர்கள் அவர்கள்தான்.,

எந்தப் பக்கத்தின்  பொய்யை நம்புவது என்பது அவர்களுடைய  பிரச்சனை.

இன்னும் என்ன பொய்யைச் சொல்லி விசுவாசிகளை ஏமாற்றலாம் என்பது மற்றையவர்களுடைய பிரச்சனை.

சாதாரண மனிதர்களைக்கூட துரோகிகள், எட்டப்பன்கள் என்று நாக்கூசாது பேசி,  எள்ளி நகையாடி, தமது ஊடகங்களின் ஊடாக பொய்யான பிரச்சாரம்செய்து,  சமூகத்தில் இருந்து ஒதுக்கிய இவர்களை, அவர்களின் உற்ற சகாக்களைக்கொண்டே ”துரோகிகள், ஒத்தோடிகள்” என்று தூற்றவைத்திருக்கிறது காலம்.

காலம் பொல்லாதது நண்பர்களே. பொய்யையும் புரட்டையும் அது வாழ விட்டதாய் சரித்திரமில்லை.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்