அபிவிருத்தி அரசியல் நோர்வே ”அறிவோர் அரங்கத்தையும்” அம்பலப்படுத்துகிறது.



சில வாரங்களுக்கு முன் நோர்வேக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வந்திருந்தார்.

அவர் வந்தது ஒன்றும் தற்செயல் அல்ல.

இலங்கை அரசுடன் இணைந்து மிக நெருக்கமாகச்செயற்படும் நோர்வே ஈழமக்கள் அவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா, நோர்வே தமிழர் சுகாதார அமைப்பின் தலைவர் பல்வைத்தியர் சிவகணேசன், Balasingham Yogarajah ஆகியோரின் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே சுகாதார அமைச்சர் இங்கு வந்தார்.

இதற்கு நோர்வே அரசின் உதவியும் உண்டு. நோர்வே அரசும் அபிவிருத்தி அரசியலின் முக்கிய பங்காளி.

சுகாார அமைச்சருடன் நோர்வே அரசு, நோர்வே அரச நிறுவனங்கள் என்று பேச்சுவார்த்தைகள், சுற்றுலாக்கள் நடந்தன.

மிக முக்கியமாக சந்துரு விசாகப்பெருமாள், Balasingham Yogarajah அகியோரின் தலைமையில் இயங்கும் ”அறிவோர் அரங்கத்திற்கும்” பெரும் விளம்பரத்துடன் சுகாதார அமைச்சர் அழைக்கப்பட்டு சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வானது சுகாதார அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் இருக்கும்போதே அவருடன் நெருங்கிய உறவினைப்பேணும் நோர்வே பிழைப்பு அரசியல்வாதிகளுடன் அறிவோர் அரங்கமும் கைகோர்த்துள்ளதா என்னும் கேள்வியும் எழுகிறது.

இந்த சுகாதார அமைச்சரே தற்போது வடமாகாண முதல்வருக்கெதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையின் முக்கியஸ்தருள் ஒருவர்.

வடமாகாண முதல்வரை ஓரம்கட்டும் இந்த நடவடிக்கை மிகத் தந்திரமாகத் திட்டமிடப்பட்டு, இரகசிய ஆதரவுகளைப்பெறுவதற்காக புலத்துத் தமிழர்களிடம் அனுப்பப்பட்டவரே வடமாகாண சுகாதார அமைச்சர். தமிழர் கட்சிகள் அல்லாத வடமாகாண கட்சிகளிடமும் இலங்கை அரசின் ஊடாக ஆதரவு பெறப்பட்டு நடாத்தப்பட்ட அரசியல் நகர்வு.

இவற்றை எல்லாம் அறியாதவர்கள் அல்லர் நோர்வே சுகாதார அமைச்சரை அழைத்தவர்கள்.

நோர்வே தமிழ் மக்களிடம் ஊழற்குற்றச்சுாட்டப்பட்ட சுகாதார அமைச்சரை பிரபலப்படுத்தும் திட்டம் ரீரீசி, நேர்வே ஈழமக்கள்அவை, Balasingham Yogarajah, சந்துரு விசாகப்பெருமாள் ஆகியோரின் ஆசீர்வாதத்துடனேயே நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகவே புரிகிறது.

நோர்வேயில் உள்ள பெரும்பான்மையான தமிழர் அமைப்புக்களிடையே இலங்கை அரசு மிகத் தந்திரமாக ஊடுருவியுள்ளது என்பதனையே ”அறிவோர் அரங்கத்தின்” சுகாதார அமைச்சரைப் பிரபலப்படுத்தும் நடவடிக்கையும் எடுத்துக்காட்டுகிறது.

காற்றுப் புகாத இடத்திலும் அபிவிருத்திஅரசியல் புகும்




No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்