அம்மாவின் அட்டகாசங்கள் - 01

இருபது வருடமாக எனது அழகிய தலையின் வெளிப்புறத்தில் எதுவித மாற்றமும் இல்லை. ஏதோ ஒன்று இரண்டு முளைத்திருக்கலாம் அல்லது நாலைந்து விழுந்திருக்கலாம்.
இன்று, அம்மா என்னைக் கண்டதும், 
 “என்னடா முழு மொட்டையாகிவிட்டது என்று மிக மனவருத்தத்துடன்“ கேட்டார்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதானே, என்று நினைத்தபடியே பொறுத்துக்கொண்டேன்.
சற்று நேரத்தின் பின் அப்பாவின் படத்தைக் காண்பித்து “பார், அப்பாவுக்கு தலைமயிர் இருக்கிறது என்றார்“
எனக்கு சுர்ர்ர் என்றது.
அவரின் தலையில் ”வறண்டுபோன குளத்தைச் சுற்றி நாலு புல்லு முளைப்பதில்லையா என்று அதுபோல நாலு மயிர் இருக்கிறது” என்றேன்.
“வந்திட்டான், குதர்க்கம் கதைக்க என்று முணுமுணுத்தார்“, அம்மா.
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு“ என்றேன்.
அடிப்பதற்கு கையை ஓங்குகிறாள் கிழவி.
----------
காலை இடியப்பம் படைக்கப்பட்டது. சாப்பிட்டேன்.
சாப்பிட்டு இன்னும் ஒரு மணிநேரம் ஆகவில்லை.
தம்பி, நீ இன்னும் சாப்பிடவில்லை, சாப்பிடு சாப்பிடு என்று கலைத்தபடி இருக்கிறார். நானும் ”ஆத்தா, ஆளைவிடு தாயி“ என்று ஓடிக்கொண்டிருக்கிறேன்.
திருவிழா ஆரம்பித்திருக்கிறது.
“வெள்ளவத்தை விசா பிள்ளையாரே உனது *Oslo தம்பியின்* பக்தனைக் காப்பாற்று..

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்