குடும்பப் பெருமை

தொலைபேசி சிணுங்கியது. யாரொன்று பார்த்தால், அப்பரின் அழகிய ராட்சசி.

”அம்மா” என்று சம்பாசனையை தொடக்கியதும் கிழவி Computer, RGB, HDMI என்று கூறிக்கொண்டிருந்தார். குரல் பதட்டமாய் இருந்தது.

”ஒன்றும் புரியவில்லை” யாரு இரு நம்ம அம்மாவின் (vocabulary) சொல் வங்கியை upgrade பண்ணியது” என்று யோசித்துக்கொண்டிருந்தபோது
திடீர் என்று ”பாபாவை காணவில்லை என்றார் ”(சத்தியசாயி பாபா அல்ல, இது வேறு பாபா.

எனக்கு குஷி பிடித்துக்கொண்டது. கிழவி குளம்பியிருக்கிறாள் எனவே இன்னும் குளப்புவோம் என்று நினைத்தவுடனேயே ...

”யாராவது பாபாவை மண்டையில போட்டுட்டாங்களா அம்மா” என்றேன்.

யோசிக்கிறார்...

”யார் கதைக்கிறது” என்றார். குரலில் தடுமாற்றம்.

”ஏன் உமக்கு யாருக்கு எடுத்தது என்று தெரியாதா” என்றேன்.

”இது சஞ்சீவின் குரல் இல்லையே” என்றார்.

” அப்ப என் குரல் மறந்துவிட்டதா என்றேன்”

”அட நீயாடா..உனக்கா எடுத்திருக்கிறேன், அவனுக்குத்தான் எடுத்தன். நீதான் விசர்க்கதை கதைப்பாய். அவன் அப்படி இல்லை. அவன்தான் ஸ்கைப் போடுறது எப்படி என்று சொல்லித்தந்திருக்கிறான். அதில என்றார் Computer, RGB, HDMI என்று இருக்கு” என்றார்.

”அதென்ன பாபாவை காணல என்கிறீர்கள்”

” ஓம்... ஸ்கைப் எப்படி போடுறது என்று எழுதி இருக்கிற கொப்பில TV ஐ RGB ல விட்டால் பாபா வருவார் என்று இருக்கு என்று அவன் சொல்லியிருக்கிறான்.”

எனக்கு விடயம் விளங்கிவிட்டது. அம்மாவின் கணணியில் Screen saver ஆக அம்மாவின் பிரம்மகுமாரி பாபா சிரித்தபடி இருக்கிறார் என்பது எனக்குத்தெரியும். அவர் அதே சிரிப்புடன் அதே கணிணியில் ஆகக் குறைந்தது குறைந்தது 5 வருடமாக இருக்கிறார்.

”அம்மா போலிசுக்கு போகலியா” என்றேன்”

”ஏன்டா” என்றார் அப்புறாணியாய்

”பாபாவை காணவில்லை என்று முறைப்படு செய்ய”

”டேய், எப்படா நீ திருந்தப்போறாய்? .. பெரியாக்களை மதியடா, தம்பிய பார்... நீயும், உன்ட தங்கச்சியும்தான் இப்படி குரங்குச் சேட்டைவிடுறது”

”சரி சரி.. பாபாவின் முகம் இருக்கிற இடத்தில் ஒருபெரிய சதுரம் இருக்கும் அதில் உள்ள cancel பட்டனை அம்த்தினால் பாபா பறந்துவருவர்” என்றேன்.

”பொறு”.. என்றுவிட்டு அதை அமத்தினார்.

”ஓமடா பாபா வந்திட்டார் ” என்றார். படு குதூகலமாக.

”இது சஞ்சயானந்தாவின் திருவிளையாடல்” என்றேன்.

எனது கதையைக் கேட்டவில்லை கிழவி. ஸ்கைப்பில் வம்ச வாரசான தம்பின் மகனுடன் கதைக்கவேண்டும் என்று கூறிவிட்டு ” கடக்” என்று தொலைபேசியை வைத்தார்.

தம்பியின் மகன் அம்மாவை பாட்டி, அப்பம்மா என்று அழைப்பான் அதைக்கேட்கத்தான் கிழவி ஓடினாள் என்று யாராவது நினைத்தால் அதற்கு கம்பனி பொறுப்பேற்காது.

அவன், அம்மாவை, என் அப்பா அழைத்தது போல் ”சோதி” என்றே அழைக்கிறான். அதில் அம்மாவுக்கு ஏகத்துக்கும் பெருமையும், மகிழ்ச்சியும்.
என்ட ஒஸ்லோ முருகா.... இந்தக் குடும்பத்தின் பெருமைகளைப் பார்த்தாயா?

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்