அசரீரீகளுடனான வாழ்வு











பின்னிரவில்
அதீதக் கனவுகளின் களைப்பில்
மீள்கிறது நிஜவுலகு
தலையருகிற் இடர்கிறது
பூவினும் மிருதுடன், அறியும் வாசனையுடனான,
நினைவுகளின் அட்சயபாத்திரமாய்
ஒரு சிறு கை
மெதுவாய் தொட்டுணர்கிறேன்

கசியும் நினைவுகளில்.....
உனக்கு, இது நான்
காதுக்குள் அசரீரியாய்
அன்றொரு நாள் கேட்ட
வாசனை வார்த்தைகள்

எடுத்தணைத்துக்கொள்கிறேன்
தந்தையர் தினத்தன்று
கிடைத்த கரடிப்பொம்மையை

மெதுவாய்
நினைவுகளின் மகா சமுத்திரத்தில்
நனைந்து மிதந்து தொலைந்து போகிறது
மற்றொரு இரவு

காத்திருக்கிறது
அசரீரீகளுடனான பகல்



.

1 comment:

  1. கவிதை வடிவில் தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்