குதர்க்கங்களும் ஒரு கொலையும்




















சூரியன் மேற்கே உதிக்கிறதாம்
என்றார்கள்
”வாதம்” என்னும் பெயரில்
குதர்க்கம் பேசியவர்கள்

என்னைக் கொல்வதாயும்
நினைத்துக் கொள்கிறார்கள்
ஆனால்
அது வாதம் இல்லை
குதர்க்கம் என்பது
எனக்கு மட்டுமே
புரிகிறது

ஆனால் அதை
வாதித்து,
சாதிக்கும்
அவசியம் எனக்கில்லை

பாவம் அவர்கள்
கற்பனையில் வாழட்டும்
மட்டற்ற மகிழ்ச்சியில்

புரிந்ததா
கொலைஞர்கள்
பலவிதம் என்று?


.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்