இத்தால் சகல சோமாலிய நாட்டவருக்கும் சஞ்சயன் என்னும் நான் அறியத்தருவது என்னவென்றால்

இத்தால் சகல சோமாலிய நாட்டவருக்கும் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் என்னும் நான் அறியத்தருவது என்னவென்றால்:

இனி மேல் நீங்கள் யாராவது எனக்கு அஸ்லாமலைக்கும் சொல்லும் போது நான் அலைக்கும் அஸ்லாம் சொன்னால் அது நான் உங்கள் நாட்டவன் என்று அர்த்தப்படாது என்பதை இத்தால் மிகத் தெளிவாக அறியத்தருகிறேன்.

என் நிறம் கொண்ட சகோதரமே சற்று யோசி

” a ஐ @ ஷ d ஹா % \ ” என்று எனக்கு புரியாத மொழியில் பக்கத்தில வந்து இருந்து கதைத்தால் நான் நான் என்ன செய்வேன். நீங்கள் பண்ணும் இம்சை கொஞ்சமா? பஸ்ஸில், புகையிரதத்தில், நிலக்கீழ் புகையிரதத்தில் மற்றும் பொதுக் கழிப்பறையில் தொடங்கி எல்லா இடத்திலும் உங்களிடம் நான் படும் பாடு... பெரும்பாடய்யா..

அலுத்துவிட்டதய்யா உங்கள் தொல்லை. கண்ட கண்ட இடத்திலெல்லாம் வைத்து புரியாத பாசையில் நீங்கள் ஏதோ சொல்ல நான் முழிச..பிறகு நீங்கள் முழுச. நமக்கு தேவையா இது? ஒரு சின்ன புன்னகையுடன் கடந்து போனாலென்ன?

நேற்று ஒருத்தன் திரத்தோ திரத்து என்று திரத்தி வந்து ஏதோ கேட்கிறான்... ஒரு மசிரும் புரியவில்லை. ஒரு மாதிரியாய் நான் தமிழன் உன் மொழி தெரியாது என்றேன். பாவிப்பயல் ஒரு புன்னகையைத்தானும் காட்டாமல் முகத்திலடித்த மாதிரி விருக்கென்று திரும்பிப்போனான். சரியான கஞ்சப் பரம்பரையய்யா உன்னுடையது. ஒரு புன்னகைக்கும் உன்னிடம் பஞ்சமா? கஞ்சப்பயலுக.....


ஒரு நாள் ஒரு முக்காட்டுத் தேவதையும் ஏதோ கேட்டாள்.... பாவிப்பய மகன் நான் பதில் சொல்லத் தெரியாமல் இருந்தேனே... தேவதை என்ன கேட்டாளோ யார் கண்டார்கள். (ஜ லவ் யூ சொல்லியிருப்பாளோ?... நம்ம பர்சனாலிடி அப்பிடித் தானே)


தேவதைகள் மட்டும் என்னுடன் பேசலாம்.. அவர்களுக்கு மட்டும் விதிவிலக்களிக்கிறேன். அதற்காக உடம்பில் குண்டு கட்டிய ‌தேவதையுருவிலுள்ள பேய்களை அனுப்பாதீர். பிரச்சனை ஏதும் எனின் பேசித் தீர்த்துக் கொள்வோம். நான் தமிழன்.... ஆயுதம் களைந்து பேச்சாயுதம் பூண்டிருப்பவன்.... புரிகிறதா என்நிறத்தவனே?

என்னைப் பார்த்தால் கடற் கொள்ளைக்காரன் மாதிரியா இருக்கிறது? ஏதும் காமடி கீமடி பண்ணலியே நீங்கள்?

சத்தியமாய்ச் சொல் உண்மையிலேயே அவவ்வளவு பயங்கரமானவானகவா தெரிகிறேன்? அகத்தின் அழகு முகத்தில் காணும் வித்தை அறிந்தவரோ நீவிர்?

அதனாலேயே நீங்கள் ஏதும் business பேச வருகிறீர்கள் என்றால், மனிதர்களுக்கு நான் விலை பேசுவதில்லை என்பதையும் அறிவிக்கிறேன். ஆனால் உனக்கு ஒரு டிப்ஸ் தருகிறேன். தமிழர்களிலேயே நானறிந்த தலைசிறந்த கொள்ளைக்காரன் தமிழ்நாட்டில் கறுப்புக் கண்ணாடியுடன் இந்தா அந்தா என்ற வாழ்கிறானாம்
பணம் என்றால் பிணமான பின்பும் வாய்திறப்பானவன்.
விரும்பினால் business பேசு அவனுடன்...
கவனம்! அடுத்து அவன் விற்பது உன் நாடாயுமிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த ஒரே ஒரு கடற் கொள்ளைக்காரன் எனது பெருமதிப்பிற்குரிய சீனத்து ”அகூதா” வும் அவனின் தளபதி சோழநாட்டு இளையபல்லவனும் தான். அவர்களுடன் என் இளைய பிராயத்தில் பல தடவைகள் ஆயிரம் தீவுக் கூட்டம் (பிலிப்பைன்ஸ்) வரை கடல் புறாவில் கடலோடியிருக்கிறேன். எத்தனையோ கப்பல்களை இளையபல்லவனுடனும், அமீருடனும் சேர்ந்து எரியூட்டி கைப்புற்றியிருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் சத்தியமாய் உண்மை உங்களின் இன்றைய கப்பல்களை விட பெரியது, வல்லது சாண்டில்யனின் அன்றைய கடல்புறா.


அது சரி உங்களுக்கு ஏனிந்த business இல் இவ்வளவு ஆர்வம்? கொள்ளை லாபம் கிடைக்கிறதோ? ஏதோ விளம்பரம் எல்லாம் செய்கிறீர்களாமே தொலைக்காட்சியில், உண்மையா? ‌வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தானே... என்ன?

ஏன் ஆயுதம் என்றதும் பல்லிளிக்கிறீர்கள்.... நான் சொன்னது வேற ஆயுதமய்யா... ஹய்யோ... ஹய்யோ..

இறுதியாய் ஒன்று...

கண்ணா! கவனமய்யா கவனம்
கவனமாய் business பண்ணு. எதிரிகளை சம்பாதிக்காதே... சுவடே இல்லாமல் பண்ணிப்புடுவாய்ங்க பாவிப்பயலுக.. (எல்லாம் அனுபவம் தான்)


அன்புடன்

சோமலியனல்லாத
சஞ்சயன்

நோர்வே

2 comments:

பின்னூட்டங்கள்