1. - ஏறாவூர்

எனக்குள் எந்த ஆண்டு நினைவுகள் முதலில் வருகிறது என்று பார்த்தால் 1970 – 1971 போல இருக்கிறது….
ஏறாவுர் போலீஸ் உத்தியோகஸ்தர் வீடுகள் உள்ள தொடர் வீடுகளில் முதல் வீடு,
சுருட்டு சுத்தும் கடைக்கு முன்னால்,
காளிகோயில் பக்கத்தில்…
நண்பர்கள் பற்றி ஞாபகங்கள் இல்லை.

71 இல் முதலாம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். பல ஆண்டுகளின் (1980)பின் மீண்டும் ஏறாவுர் திரும்பிய பின் ரட்ணராஜா மாஸ்டரின் கணித ரியுசனில் சேர்ந்த முதல் நாள் ஒருவன்(ர்)(விமல்ராஜ); என்னுடன் முதலாம் வகுப்பு படித்ததாகவும், என்னை ஞாபகம் இருப்பதாகவும் சொன்னான். ஆச்சரியமாக இருந்தது… ஏன் என்னை ஞாபகம் வைத்திருந்தான்?

பல தடவைகள் இதைப்பற்றி யோசித்திருக்கிறேன், ஒவ்வொரு முறையும் மனதினுள் ஒரு ஏகாந்தமான உணர்வை ஏற்படுத்தும் நினைவு இது.

சில சம்பவங்களுக்கான காரணங்களைத் தேடக்கூடாது, அதில் இதுவும் ஒன்று.

விமல்ராஜ் பற்றி இன்னும் கனக்க எழுத இருக்கு… ;-)

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்